Friday, September 23, 2011

தாய் தந்தையை பிடிக்காதவர்கள் உலகதில் உண்டா ? by அகத்தியர்

 தாய் தந்தையை பிடிக்காதவர்கள் உலகதில் உண்டா என்ன?

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
கோவிலில் ஒன்று.. குடும்பத்தில் ஒன்று ..
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

Agathiyar - Thayir Sirantha Kovilum Illai Song, Video and Lyrics

Friday, September 16, 2011

HIDDEN TRUTH - சிவவாக்கியர்



சிந்தனை செய் மனமே !
-----------------------------------

காலைமாலை நீரிலே முழுகு மந்தமூடர்காள்

காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும் 

காலமே யெழுந்திருந்து கண்கள் மூன்றிலொன்றையும்

மூலமே நினைந்திராகில் முத்தி சித்தியாகுமே !

-------------------------------------------------------------------------------
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 

சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா 

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் 

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ !

-------------------------------------------------------------------------------
ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே 

வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர் 

பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர் 

ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே !

-------------------------------------------------------------------------------
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் 

எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்

பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்

ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே !

-------------------------------------------------------------------------------
ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே 

தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர் 

ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை 

பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே !

-------------------------------------------------------------------------------
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 

பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் 

ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ 

ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே !

-------------------------------------------------------------------------------
வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர் 

வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ 

வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள் 

வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே !

-------------------------------------------------------------------------------
புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர் 

புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே 

புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய் 

புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே !

-------------------------------------------------------------------------------
மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர் 

மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும் 

மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர் 

மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும் !

-------------------------------------------------------------------------------
சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ 

பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ

காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ 

சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே !

-------------------------------------------------------------------------------
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா 

இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ 

பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ 

பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரு மும்முளே !

-------------------------------------------------------------------------------
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே 

வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ 

மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல் 

சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே !

-------------------------------------------------------------------------------
சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும் 

சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர் 

காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் 

ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே !

-------------------------------------------------------------------------------
கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா 

வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா 

ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால் 

காயமான பள்ளியில் காணலாம் இறையையே !

-------------------------------------------------------------------------------
வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை 

தச்சில்லாத மாளிகை சமைந்தவாறெ தெங்ஙனே? 

பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள் 

சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே !

-------------------------------------------------------------------------------
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர் 

வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே 

காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே 

ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே !

-------------------------------------------------------------------------------
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா 

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே 

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே !

-------------------------------------------------------------------------------
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும் 

செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர் 

உம்மதம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின் 

அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே !

-------------------------------------------------------------------------------
பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 

பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம் 

ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ 

ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே !

-------------------------------------------------------------------------------
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் 

வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் 

நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் 

எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே !

-------------------------------------------------------------------------------

- சிவவாக்கியர்

Thursday, September 15, 2011

அழுகணிச் சித்தர் பாடல்கள்

அழுகணிச் சித்தர் பாடல்கள்


கலித்தாழிசை

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
விளையாட்டைப் பாரேனோ! 1

எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
நிலைகடந்து வாடுறண்டி! 2

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!
கோலமிட்டுப் பாரேனோ! 3

சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ! 4

பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ! 5

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ! 6

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ! 7

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ! 9

பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ! 10

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! 11

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ! 12

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ! 13

உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி! 14

மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி! 15

காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ! 16

தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்! 17

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ! 18

கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ? 19

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே! 20

சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி! 21

பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி! 22

கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
கடுகளவு காணாதோ! 23

பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன ? 24

ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேனடி! 25

தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ ? 26

அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ! 27

உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ ? 28

காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன ? 29

சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ! 30

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ? 31

வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ! 32

ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி
அருளடைய வேணுமென்று
தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி
தற்சொரூபங் காட்டி யென்னை 33

கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி
கொண்டான் குருவாகி
கள்களப் புலனறுக்க - ஆத்தாடி
காரணமாய் வந்தாண்டி. 34

ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி
ஐம்பத்தோர் அக்கரமும்
சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி
சுட்டான் துரிசறவே. 35

வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
மாண்டுவிழக் கண்டேண்டி
தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
தலைகெட்டு வெந்ததடி. 36

மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
மலர்பறித்துத் தூவாமல்
நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
நின்றநிலை காணேண்டி. 37

பாடிப் படித்து - ஆத்தாடி
பன்மலர்கள் சாத்தாமல்
ஓடித் திரியாமல் - ஆத்தாடி
உருக்கெட்டு விட்டேண்டி. 38

மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
பேசாப் பெருமையன் காண். 39

புத்தி கலங்கியடி - ஆத்தாடி
போந்தேன் பொரிவழியே
பதித்தறியாமல் - ஆத்தாடி
பாழியில் கவிழ்ந்தேனே. 40

தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி
தொல் பொருளை அறியார்கள் . . .

(முடிந்தது)

Wednesday, September 14, 2011

மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் vs தூக்கம்


  

தூக்கத்தின் போது மூச்சு மிக அதிகமாக ஒடி உயிர் அழிகிறது.எனவே தூங்கும் போது மூச்சு அதிகம் ஓடி (நிமிடத்துக்கு 64 மூச்சு வீதம் ஓடி)ஆயுள் விரயமாகி நாம் மடிகின்றோம்.


இதையே அகத்தியர்
உண்ணும்போது உயிர் எழுத்தை உயரே வாங்கு,
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே ஆகும்,
பெண்ணின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம்
பேணி வலம் மேல்தூக்கி அவத்தில் நில்லு
தின்னும் காய் இலை மருந்து இதுவேயாகும்
தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார் 
மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார்தாமே
றலி கையில் அகப்படுவார் மாட்டர்தாமே. 

        -அகத்தியர்-              


Saturday, August 20, 2011

இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள -- சிவவாக்கியர்

இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள -- சிவவாக்கியர்

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!
உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?

ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.


அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலங்களும் அனாதியோ?

உயிரி்ருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம்
உயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதடா
உயிரையும் உடம்பையும் ஒன்று விப்ப தேதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா?

"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்களுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Saturday, July 30, 2011

அருணகிரிநாதர் SONG




முத்தை  தரு  பத்தி  திருநகை
அத்துக்கிறை  சக்தி  சரவண
முத்திக்கொரு  வித்து  குரு  பர  என  ஓதும் 

முக்கட்  பர  மாற்கு  சுருதியின்
முற்பட்டது  கற்பித் - திருவரும்
முப்பத்து  முவர்க்கத் - தமரரும்  அடி  பேனா 

பத்துத் - தலை  தத்தக்  கணைதொடு
ஒற்றைக் - கிரி மத்தைப்  பொருதொரு
பட்டப்- பகல் வட்டத் - திகிரியில்  இரவாக 
பத்தற்கிர தத்தைக் கடவிய 

பச்சைப்புயல்  மெச்சத்  தகு  பொருள்
பட்சத்தொடு  ரட்சித்  தருள்வதும்  ஒரு  நாளே 
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிறத்த  படம் வைத்துப் பயிரவி
திக்கொட்க  நடிக்கக் கழுவொடு கழுதாட 
திக்குப்  பரி  அட்டப்  பயிரவர்
தொக்குத்தொகு  தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத்  த்ரிகடக  என  ஓத 

கொத்துப்  பறை  கொட்டக்  களமிசை
குக்கு  க்குக்  குகுகுகு
குத்திப்  புதை  புக்குப்  பிடியென  முதுகூகை 
கொட்புற்றெழ  நட்பத்ர்  அவுணர
வெட்டி  பலியிட்டுக்  குலகிரி 

குத்துப் பட  ஒத்துப்  பொரவல  பெருமாளே 

Friday, July 29, 2011

நினைமின் மனனே! நினைமின் மனனே! by பட்டினத்தார்


 நான்காவது கச்சித் திருவகவல் - பட்டினத்தார் - சித்தர் பாடல்கள்
முதலாவது கோயிற்றிருவகவல்
(திருமண்டில ஆசிரப்பா)
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க! 5
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன, 15
தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை, 20
இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள், 25
பீளையு நீரும் புலப்படு மொருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;
சளியு நீருந் தவழு மொருபொறி;
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;
வளியு மலமும் வழங்கு மொருவழி 30
சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை 35
ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு 40
முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே! 45
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!

Monday, July 25, 2011

கலியுகம் பற்றி காரைச் சித்தர்


 
கலியுகம் பற்றி காரைச் சித்தர்
 

யுகமாறிப் போச் சுதடா கலியுகத்தில்
யோகியவன் நிலைமாறிப் புரண்டு போவான்
சகமாறிப் போச் சுதடா சகத்தி லுள் ளோர்
தமைமறைந் தார் பொருள் நினைத்தே தவிக்க லுற்றார்
அகமாறிப் போச் சுதடா காமம் கோபம்
அறுவகையாம் பேய்க்குனங்க ளதிக மாச்சே
புகழ்மாறிப் போச் சுதடா மனிதற் குள் ளே
பூரணர்கள் மறைந்துள்ள ரவரைக் காணே .

காலநெறி யாதுரைப்பேன் கேளாய் கேளாய்
காணவரு மாயிரம வருடத் துள் ளே
பாலமடா வானத்துக கேற்ப பாதை
பகனவெடி சுகனவெடி பண்ணு வார்கள்
சீலமுறும் வர் ணதர் மம் சிதைந்து போகும்
சீச் சீச்சீ வரன் முறைகள் மாறிப் போகும்
கோலமுறிங் குவலயமே சட்ட திட்டம்
கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம்

தீராத புயல் கயெல்லாம் தினமுண்டாகும்
தீக் கங்கு எரிமலைகள் சிரிப்புக் கூடும்
தேராத நோய்க ளெலாம் தின முண்டாகும்
திசை கலங்கும் பூகம்பத் திறமே சாடும்
நேரான நெறியெல்லாம் நடுங்கி யோடும்
நெறியில்லா நெறியெல்லாம் நிறைந் தூ டாடும்
போராகக் குருதிகொப் பளித்துப் பொ ங்கும்
புகையாகப் புவனவளம் புதைந்து போகும்

தெய்வமெலாம் விண் ணாடிப் போகும் போகும்
தீ மையெலாம் மண் ணகத்தின் தெருக்கூத் தாகும்
உய்யுமுண் மை யுளத் துண் மை யோடிப் போகும்
உலகவுண் மை விஞ் ஞானம் கூடி வேகும்
ஐயமில் லை யெனவகங்கா ரந்தான் துள்ளும்
ஐயையோ அகிலமெலாம் கள்ளம் கள்ளம்
துய்யநெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர்
தூ லநெறி காட்டுகின் றா ரெத்தர் ரெத்தர்.

வெத் துலக விதியெல்லாம் வெப்பம் தட்பம்
விஞ் ஞான விதியெல் லாம் சேர்ப்பும் கூரப்பும்
செத் துலக விதியெல் லாம் யாதம் கூதம்
சீ வனுடல் விதியெல் லாம் காமம் கோபம்
சத் துலக விதியெல் லாம் சகசம் சாந்தம்
தா ன் தா னா த் தான் மயமா த் தழைவே தாந்தம்
சித் துலக விதிசத் தி னோடு சித் தா ய் ச்
சேரனந் தத் தா னந் தச் சீராம் வேராம !!!!!

Saturday, July 16, 2011

காசிக்கு போனால் வினை போகுமா?


கடுவெளிச் சித்தர் பாடல் # 15

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
இப்பாடலில் கொஞ்சம் நிறையவே கேள்விகளை எழுப்புகிறார்.
காசிக்கோ டில்வினை போமோ - காசிக்கு போனால் வினை (பாவம்) போகுமா?
அந்தக் கங்கையாடில் கதிதானும் உண் டாமோ? - அந்த கங்கையிநீறாடினால் நற்கதி கிடைக்குமா?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - (இப்படியாக நடந்து விட்டால்) பேசும் பேச்சுகளும், செய்யும் செயல்களும் நன்மை, தீமைகளை உண்டாகாதா?
பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ. - மேலும் பல பிரிவுகள் பிறப்பதும் போற்றுதலோ, அன்றி தூற்றுதலோ?
காசிக்கு போனால் வினை போகுமா? அந்த கங்கையிநீறாடினால் நற்கதி கிடைக்குமா? இப்படியாக நடந்து விட்டால், பேசும் பேச்சுகளும், செய்யும் செயல்களும் நன்மை, தீமைகளை உண்டாகாதா? மேலும் பல பிரிவுகள் பிறப்பதும் போற்றுதலோ, அன்றி தூற்றுதலோ?

-திருவருட்பா (இறவா நிலை)

"கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேற சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார். "
-திருவருட்பா (இறவா நிலை)-

Friday, July 15, 2011

போதை வஸ்துக்களான பிடிக்க கூடாது ?

கடுவெளி சித்தர் பாடல் # 29

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29


பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
போதை வஸ்துக்களான கஞ்சா, புகை, பிடிக்க கூடாது, போகத்தை காட்டி உன் குடியை கெடுக்கும் காமவெறி கொள்ள கூடாது, உயிர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அதை கொன்று அதற்க்கு துன்பம் விளைவிக்க கூடாது, பக்தி இல்லாத புத்தி பேதலிக்கும் நூல்களை படிக்க கூடாது.

பொய் வேதங்களை பார்க்க கூடாது

கடுவெளிச் சித்தர் பாடல் # 24

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

பொய் வேதங்களை பார்க்க கூடாது, அதை பொதிப்பவரை நாடாதே. அந்த போதகர் சொல் போகும்போது உடன் வராது. விழியால் மாய்க்கும் மங்கைகளை சாராதே, துன்பம் தரும் துர்மார்க கூட்டத்தில் சேராதே, அதில் மகிழாதே.

சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்

சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்
(ஆசிரியர் : சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் 

(ஆசிரியர் : சிவவாக்கியர்)

    காப்பு
    அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
    ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
    சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
    தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.
    0
    கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
    கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
    பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
    பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.
    1
    அக்ஷர நிலை

    ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
    ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
    ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
    ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.
    2
    சரியை விலக்கல்

    ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
    நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
    வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
    கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
    3
    யோக நிலை

    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
    கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
    விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
    அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
    4
    தேகநிலை

    வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
    விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே
    நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்
    சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.
    [நந்துதல் - இச்சை கொள்ளுதல்; நடுவன் - எமன்]
    5
    ஞான நிலை

    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
    என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
    என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.
    6
    நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
    நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
    அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
    எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.
    7
    மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;
    எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;
    கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-
    நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.
    8
    அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
    கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
    பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
    துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
    9
    அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
    சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
    சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
    எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
    10
    கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
    இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
    சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
    இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
    11
    நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
    கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
    ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
    ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
    12
    யோக நிலை

    சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
    வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
    மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
    சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!
    13
    நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
    பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
    ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
    காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.
    14
    வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை
    தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே?
    பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்!
    சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.
    15
    அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம்
    நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்
    பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
    பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே.
    16
    அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்
    ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம்
    இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய்
    எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே?
    17
    சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
    சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
    காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
    ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!
    18
    சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்
    மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை?
    சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்
    கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.
    19
    அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
    அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
    அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
    அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!
    20
    அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!
    பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
    நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
    அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே!
    21
    நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,
    வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?
    காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும்
    ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!
    22
    ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;
    ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்;
    ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே
    ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே!
    23
    கிரியை நிலை

    வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய்
    மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
    நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
    ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே!
    24
    உற்பத்தி நிலை

    அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
    பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
    கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே
    மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?
    25
    அறிவு நிலை

    பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?
    பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
    மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை?
    மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?
    26
    அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள்
    பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே?
    விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்
    கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.
    27
    தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
    பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம்
    ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!
    நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!
    28
    தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
    செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே
    விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
    எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே!
    29
    நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
    விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்;
    நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீரேல்
    சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ!
    30
    பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனை
    நாட்டிலாத நாதனை நாரிமங்கை பாகனை
    கூட்டிமெள்ள வாய்புதைத்துக் குணுகுணுத்த மந்திரம்
    வேட்டகாரர் குசுகுசுப்பைக் கூப்பிடா முகிஞ்சதே.
    31
    குசுகுசுப்பை - சுருக்குப்பை
    தரிசனம்

    செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல்
    ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்.
    ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
    வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.
    32
    அறிவு நிலை

    மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்
    ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே.
    மாறுபட்ட தேவரும் அறிந்துநோக்கும் என்னையும்
    கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே.
    33
    கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
    கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
    கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
    ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
    34
    செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
    செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
    உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
    அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!
    35
    பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
    பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
    ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
    ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!
    36
    இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
    பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்
    உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்
    சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமோ!
    37
    கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
    கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
    நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
    மனத்தின்மாயை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ!
    38
    பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
    இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
    பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
    பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
    39
    வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;
    வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
    வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
    வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!
    40
    ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
    போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
    மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
    ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
    41
    பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
    பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?
    குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே.
    அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.
    42
    அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ?
    கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?
    இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ?
    செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே.
    43
    சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
    சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
    முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
    வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே.
    44
    ஒடுக்க நிலை

    சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
    சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
    மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
    வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே.
    45
    கிரியை

    சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
    பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
    காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ?
    சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?
    46
    அறிவு நிலை

    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.
    47
    அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,
    துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,
    ப்றையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,
    புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.
    48
    தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
    தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
    ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
    தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.
    49
    சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
    மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
    சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
    செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.
    50

    காப்பு
    அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
    ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
    சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
    தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.
    0
    கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
    கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
    பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
    பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.
    1
    அக்ஷர நிலை

    ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
    ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
    ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
    ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.
    2
    சரியை விலக்கல்

    ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
    நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
    வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
    கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
    3
    யோக நிலை

    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
    கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
    விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
    அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
    4
    தேகநிலை

    வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
    விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே
    நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்
    சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.
    [நந்துதல் - இச்சை கொள்ளுதல்; நடுவன் - எமன்]
    5
    ஞான நிலை

    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
    என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
    என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.
    6
    நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
    நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
    அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
    எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.
    7
    மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;
    எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;
    கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-
    நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.
    8
    அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
    கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
    பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
    துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
    9
    அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
    சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
    சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
    எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
    10
    கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
    இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
    சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
    இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
    11
    நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
    கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
    ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
    ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
    12
    யோக நிலை

    சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
    வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
    மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
    சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!
    13
    நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
    பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
    ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
    காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.
    14
    வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை
    தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே?
    பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்!
    சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.
    15
    அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம்
    நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்
    பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
    பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே.
    16
    அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்
    ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம்
    இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய்
    எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே?
    17
    சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
    சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
    காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
    ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!
    18
    சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்
    மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை?
    சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்
    கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.
    19
    அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
    அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
    அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
    அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!
    20
    அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!
    பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
    நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
    அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே!
    21
    நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,
    வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?
    காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும்
    ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!
    22
    ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;
    ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்;
    ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே
    ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே!
    23
    கிரியை நிலை

    வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய்
    மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
    நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
    ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே!
    24
    உற்பத்தி நிலை

    அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
    பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
    கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே
    மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?
    25
    அறிவு நிலை

    பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?
    பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
    மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை?
    மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?
    26
    அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள்
    பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே?
    விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்
    கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.
    27
    தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
    பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம்
    ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!
    நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!
    28
    தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
    செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே
    விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
    எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே!
    29
    நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
    விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்;
    நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீரேல்
    சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ!
    30
    பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனை
    நாட்டிலாத நாதனை நாரிமங்கை பாகனை
    கூட்டிமெள்ள வாய்புதைத்துக் குணுகுணுத்த மந்திரம்
    வேட்டகாரர் குசுகுசுப்பைக் கூப்பிடா முகிஞ்சதே.
    31
    குசுகுசுப்பை - சுருக்குப்பை
    தரிசனம்

    செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல்
    ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்.
    ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
    வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.
    32
    அறிவு நிலை

    மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்
    ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே.
    மாறுபட்ட தேவரும் அறிந்துநோக்கும் என்னையும்
    கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே.
    33
    கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
    கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
    கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
    ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
    34
    செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
    செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
    உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
    அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!
    35
    பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
    பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
    ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
    ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!
    36
    இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
    பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்
    உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்
    சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமோ!
    37
    கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
    கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
    நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
    மனத்தின்மாயை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ!
    38
    பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
    இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
    பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
    பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
    39
    வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;
    வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
    வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
    வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!
    40
    ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
    போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
    மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
    ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
    41
    பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
    பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?
    குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே.
    அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.
    42
    அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ?
    கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?
    இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ?
    செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே.
    43
    சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
    சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
    முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
    வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே.
    44
    ஒடுக்க நிலை

    சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
    சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
    மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
    வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே.
    45
    கிரியை

    சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
    பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
    காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ?
    சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?
    46
    அறிவு நிலை

    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.
    47
    அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,
    துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,
    ப்றையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,
    புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.
    48
    தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
    தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
    ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
    தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.
    49
    சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
    மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
    சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
    செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.
    50

ஔவையார் நூல்கள்

ஔவையார் நூல்கள்:
1. ஆத்திசூடி


கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.
2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.
3. மூதுரை

கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு. 3

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா . 5

உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் . 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம். 13

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம். 15

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. 17

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால். 18

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன். 19

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு. 20

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். 21

எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம். 23

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு. 26

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். 27

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று. 28

மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம். 29

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30
4. நல்வழி


கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி. 2

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5

உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. 7

ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து . 9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும் 11

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது. 11

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு, 12

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல். 13

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும். 14

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்? 17

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும். 20

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான். 21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். 22

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை. 24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம். 26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி . 30

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல். 34

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. 35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். 40