Saturday, July 16, 2011

காசிக்கு போனால் வினை போகுமா?


கடுவெளிச் சித்தர் பாடல் # 15

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
இப்பாடலில் கொஞ்சம் நிறையவே கேள்விகளை எழுப்புகிறார்.
காசிக்கோ டில்வினை போமோ - காசிக்கு போனால் வினை (பாவம்) போகுமா?
அந்தக் கங்கையாடில் கதிதானும் உண் டாமோ? - அந்த கங்கையிநீறாடினால் நற்கதி கிடைக்குமா?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - (இப்படியாக நடந்து விட்டால்) பேசும் பேச்சுகளும், செய்யும் செயல்களும் நன்மை, தீமைகளை உண்டாகாதா?
பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ. - மேலும் பல பிரிவுகள் பிறப்பதும் போற்றுதலோ, அன்றி தூற்றுதலோ?
காசிக்கு போனால் வினை போகுமா? அந்த கங்கையிநீறாடினால் நற்கதி கிடைக்குமா? இப்படியாக நடந்து விட்டால், பேசும் பேச்சுகளும், செய்யும் செயல்களும் நன்மை, தீமைகளை உண்டாகாதா? மேலும் பல பிரிவுகள் பிறப்பதும் போற்றுதலோ, அன்றி தூற்றுதலோ?

-திருவருட்பா (இறவா நிலை)

"கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேற சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார். "
-திருவருட்பா (இறவா நிலை)-

No comments:

Post a Comment