Friday, September 23, 2011

தாய் தந்தையை பிடிக்காதவர்கள் உலகதில் உண்டா ? by அகத்தியர்

 தாய் தந்தையை பிடிக்காதவர்கள் உலகதில் உண்டா என்ன?

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
கோவிலில் ஒன்று.. குடும்பத்தில் ஒன்று ..
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

Agathiyar - Thayir Sirantha Kovilum Illai Song, Video and Lyrics

Friday, September 16, 2011

HIDDEN TRUTH - சிவவாக்கியர்



சிந்தனை செய் மனமே !
-----------------------------------

காலைமாலை நீரிலே முழுகு மந்தமூடர்காள்

காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும் 

காலமே யெழுந்திருந்து கண்கள் மூன்றிலொன்றையும்

மூலமே நினைந்திராகில் முத்தி சித்தியாகுமே !

-------------------------------------------------------------------------------
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 

சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா 

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் 

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ !

-------------------------------------------------------------------------------
ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே 

வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர் 

பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர் 

ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே !

-------------------------------------------------------------------------------
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் 

எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்

பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்

ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே !

-------------------------------------------------------------------------------
ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே 

தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர் 

ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை 

பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே !

-------------------------------------------------------------------------------
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 

பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம் 

ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ 

ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே !

-------------------------------------------------------------------------------
வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர் 

வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ 

வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள் 

வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே !

-------------------------------------------------------------------------------
புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர் 

புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே 

புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய் 

புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே !

-------------------------------------------------------------------------------
மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர் 

மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும் 

மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர் 

மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும் !

-------------------------------------------------------------------------------
சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ 

பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ

காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ 

சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே !

-------------------------------------------------------------------------------
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா 

இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ 

பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ 

பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரு மும்முளே !

-------------------------------------------------------------------------------
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே 

வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ 

மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல் 

சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே !

-------------------------------------------------------------------------------
சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும் 

சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர் 

காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் 

ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே !

-------------------------------------------------------------------------------
கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா 

வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா 

ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால் 

காயமான பள்ளியில் காணலாம் இறையையே !

-------------------------------------------------------------------------------
வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை 

தச்சில்லாத மாளிகை சமைந்தவாறெ தெங்ஙனே? 

பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள் 

சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே !

-------------------------------------------------------------------------------
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர் 

வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே 

காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே 

ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே !

-------------------------------------------------------------------------------
கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா 

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே 

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே !

-------------------------------------------------------------------------------
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும் 

செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்பன் என்கிறீர் 

உம்மதம் அறிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின் 

அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே !

-------------------------------------------------------------------------------
பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் 

பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம் 

ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ 

ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே !

-------------------------------------------------------------------------------
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் 

வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் 

நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் 

எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே !

-------------------------------------------------------------------------------

- சிவவாக்கியர்

Thursday, September 15, 2011

அழுகணிச் சித்தர் பாடல்கள்

அழுகணிச் சித்தர் பாடல்கள்


கலித்தாழிசை

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
விளையாட்டைப் பாரேனோ! 1

எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
நிலைகடந்து வாடுறண்டி! 2

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!
கோலமிட்டுப் பாரேனோ! 3

சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ! 4

பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ! 5

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ! 6

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ! 7

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ! 9

பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ! 10

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! 11

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ! 12

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ! 13

உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி! 14

மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி! 15

காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ! 16

தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்! 17

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ! 18

கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ? 19

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே! 20

சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி! 21

பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி! 22

கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
கடுகளவு காணாதோ! 23

பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன ? 24

ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேனடி! 25

தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ ? 26

அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ! 27

உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ ? 28

காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன ? 29

சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ! 30

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ? 31

வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ! 32

ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி
அருளடைய வேணுமென்று
தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி
தற்சொரூபங் காட்டி யென்னை 33

கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி
கொண்டான் குருவாகி
கள்களப் புலனறுக்க - ஆத்தாடி
காரணமாய் வந்தாண்டி. 34

ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி
ஐம்பத்தோர் அக்கரமும்
சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி
சுட்டான் துரிசறவே. 35

வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
மாண்டுவிழக் கண்டேண்டி
தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
தலைகெட்டு வெந்ததடி. 36

மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
மலர்பறித்துத் தூவாமல்
நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
நின்றநிலை காணேண்டி. 37

பாடிப் படித்து - ஆத்தாடி
பன்மலர்கள் சாத்தாமல்
ஓடித் திரியாமல் - ஆத்தாடி
உருக்கெட்டு விட்டேண்டி. 38

மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
பேசாப் பெருமையன் காண். 39

புத்தி கலங்கியடி - ஆத்தாடி
போந்தேன் பொரிவழியே
பதித்தறியாமல் - ஆத்தாடி
பாழியில் கவிழ்ந்தேனே. 40

தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி
தொல் பொருளை அறியார்கள் . . .

(முடிந்தது)

Wednesday, September 14, 2011

மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் vs தூக்கம்


  

தூக்கத்தின் போது மூச்சு மிக அதிகமாக ஒடி உயிர் அழிகிறது.எனவே தூங்கும் போது மூச்சு அதிகம் ஓடி (நிமிடத்துக்கு 64 மூச்சு வீதம் ஓடி)ஆயுள் விரயமாகி நாம் மடிகின்றோம்.


இதையே அகத்தியர்
உண்ணும்போது உயிர் எழுத்தை உயரே வாங்கு,
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே ஆகும்,
பெண்ணின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம்
பேணி வலம் மேல்தூக்கி அவத்தில் நில்லு
தின்னும் காய் இலை மருந்து இதுவேயாகும்
தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார் 
மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார்தாமே
றலி கையில் அகப்படுவார் மாட்டர்தாமே. 

        -அகத்தியர்-